Friday 15 July 2011

கடலின் மடியில்...

அலையில் நனைந்து குழந்தையாய் மாறலாம்
கரையில் நடந்து கவலைகள் நீக்கலாம்
காற்று வாங்கி களைப்புகள் போக்கலாம்
நேற்றை எடுத்து நீருக்குள் வீசலாம்

அர்த்தமற்ற அரட்டையிலும் ஆனந்தம் சேர்க்கலாம்
அமைதியாய் அமர்ந்து நினைவுகள் கோர்க்கலாம்
ஆழமாய் யோசித்து அழுதும் தீர்க்கலாம்
அவ்வபொழுது மனதை உழுதும் பார்க்கலாம்

புத்தியை மேம்படுத்தும் யுக்திகள் தோன்றலாம்
புரியாத கணக்குகளின் நுனியவிழ்த்து தேறலாம்
தற்காலிக முனிவராய் அனைவரும் ஆகலாம்
விலையில்லா நிம்மதியை வீட்டுக்கெடுத்து போகலாம்

1 comment: