Sunday 18 November 2012

புத்தகம் படிப்பது எப்படி?


காகித வாசனை நேசி
கருத்தை நன்றாய் வாசி
பிடித்தமோ இல்லையோ யோசி
நல்லதை மனதுடன் பேசி
அல்லதை குப்பையில் வீசி
வடிகட்டி வாழ்க்கையில் பூசி
கழுவலாம் ஜென்மத்து பாசி
புத்தகம் நெஞ்சுக்கு ஊசி
பிறகெதற்கு போகணும் காசி?


Saturday 3 November 2012

மழை பெய்த இரவு...


அன்பு என்ற ஒன்றை மட்டும்
அகிலம் முழுதும் அளிக்கும் மழை
அனைவரின் வீட்டிற்குள்ளும்
அவ்வப்பொழுது வர முயலும்;

விருந்தாளியை உபசரிக்க‌
விரும்பாத நம் குணத்தால்
கதவடைத்து வைத்தாலும்
கனிவுடன் காத்து நிற்கும்
அழகான குரலாலே
அனுமதி கேட்டு நிற்கும்;

மறுக்கின்ற பொழுதெல்லாம்
மனமுடைந்து மண்ணில் சாயும்
உறவாட வந்த மழை
இரவெல்லாம் அழுதபடி
சாலையில் தேங்கி நிற்கும்
காலையேனும் நம்மை பார்க்க...