Thursday 19 May 2011

நாமாக விழைந்தோ  தற்செயலாய்   நம்மை அடைந்தோ விடும் நிகழ்வுகளில் தோய்ந்த நினைவுகளின் சேகரிப்பே வாழ்கையின் அடிநாதம்.  
அனுபவ சாளரங்களின் வழியே அவற்றை அர்த்தபடுத்தும் முயற்சியிலேயே கடந்து போகிறது அனைவரின் நிகழ்காலம். சொற்களின் வாகனத்தில் பயணம் போகையில் சாத்தியபடுகிறது இத்தகைய  காலத்தின் தரிசனம். இயற்கையின் படிமங்களை மறைமுக உவமைகளாய் இழைத்து நாம் கடக்கின்ற நொடிகளின் உணர்வுகளை காலத்தில் நெய்த எண்ணங்களாய் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியே இந்த கவிதைத்தொகுப்பு.

கி. குமரன்

மே 2011 வெளியீடு