Tuesday 24 July 2012

காடு - ஒரு அறிமுகம்


காட்டின் விடியல் காண்கின்ற விழியும்
மனதுக்குள்ளே அது பாய்ச்சும் ஒளியும்
பறவைகள் தமக்குள் பேசுகின்ற மொழியும்
காலாற நடக்கையில் காற்று வீசும் ஒலியும்
கடக்கின்ற ஒவ்வொரு நிமிடத்தின் துளியும்
மகிழ்ச்சியின் சாறாய் நம்மீது வழியும்.

புற்களின் அசைவிலும் உற்சாகம் இருக்கும்
சொற்களை மீறிய அர்த்தங்கள் கொடுக்கும்
வனத்தின் வசீகரம் நம் வயதை குறைக்கும்
சுத்தமான காற்று நுரையீரல் நிறைக்கும்
நகரத்து வாழ்வின் அச்சாணி முறியும்
இயற்கை என்பதன் உச்சாணி புரியும்

Sunday 1 July 2012

ஒரு சொல்

பல காலம் சொல்லிப் பழகிய சொல்லின்
வாழ்வாலும் வயதாலும் பதிவாகும் ஒன்றின்
உச்ச‌ரிப்பின் உயிர் போன சடலமாக‌
உயிர் தந்த சொல்லின் உருவ‌ம் மாற‌
சொல்லின் எழுத்துக்களை சுடுகாட்டில் குவித்து
அதனோடு அச்சொல்லின் அர்த்தங்களை அவித்து
பொருளின் வடிவத்தை சிதையிலே தள்ளி
நாக்கினால் சொல்லுக்கு வைத்தாயிற்று கொள்ளி
வேகாத‌ சொல்லை சாம்ப‌லாய் அள்ளி
நினைவின் கோலத்தில் நிரந்தரப் புள்ளி.