Sunday 28 April 2013

கடலும் காலமும்...


அழகான அமைதியுடன்
ஆர்ப்பரிக்கும் கடலருகில்
நனையாமல் நிற்பதில்
நமக்கென்ன சுகமென்று
ஆசைகள் கொண்டு
ஆயத்தம் செய்து
அனைவரும் கடல்தரும்
அனுபவம் பெறுவதுண்டு.

அலை சேரும் இடமெல்லாம்
மணல் சேர்தல் சகஜமென்று
விரலிடுக்கில் ஒட்டியதை
வீடுவந்து கழுவினாலும்
நனைந்து காய்ந்த நமக்குள்ளே
எப்போதும் கடலிருக்கும் -
கடல் விரும்பும் நேரத்திலே
அது நம்மை வரவழைக்கும்.