Friday 12 August 2011

காதல்

நகரத்து நச்சு நான் இயற்கையின் அச்சு நீ
இருவருக்கும் இடையில் இப்படி ஒரு உறவு
வருடத்திற்கு சில முறையோ அடுத்தடுத்த விடுமுறையோ
உனைப் பார்க்க எனக்கு இவை மட்டுமே கணக்கு
பழகிப்போன சாலைகளில் பரபரக்கும் வேளைகளில்
ஓரம் நிற்கும் மரங்களில் ஒளிந்திருக்கும் உன் முகம்


கோடை வாடை குளிர் மழையென
பருவத்தின் பாவனையில் பவனி வந்து
ஆண்டு முழுதும் நாளும் பொழுதும்
உனது நினைவை ஊட்டுகிறாய் நீ
உன்னுடன் இருக்கையில் நான் பெறும் அமைதி
உன்னுள்ளே நடக்கையில் நீ தரும் நிம்மதி
பெரியோர் இதைத்தான் பேரின்பம் என்றனரோ?

நமக்கென வைத்திருக்கும் பிரத்யேக பாதையில்
பேச்சின்றி பிரயாணம் போவதே
நீ எனக்கு அளித்த வரம் - இவை நம் உறவின் பலம்
பைத்திய காதல் என்று பார்ப்போர் சொன்னாலும்
தைத்ரிய நுட்பத்தில் தழைத்தோங்கும் நெறிமுறையில்
வனம் மேல் வாய்த்த காதல் வயதுடன் வளர்கிறது
மரபு சார உணர்வு இது மௌனமாய் தொடர்கிறது...

2 comments:

  1. different meaning of love !

    ReplyDelete
  2. kadhalpatri mikavum different konam

    ReplyDelete