Friday 18 May 2012

முள் வேலி

பற்று வைத்த பலவும் வெற்று என அறிதல்
பெற்றெடுத்த தாயை பெருந் தீக்கிடுதல்
உற்சாகம் தராத வேலையில் உழைத்தல் 
கடந்ததை நினைத்தே காலத்தை கழித்தல்
அடுத்தவர் உணர்வை அடிவேரில் சிதைத்தல்
காலத்தின் வீச்சில் கனவுகள் தொலைத்தல்
அன்பை மிதிக்கும் அவமதிப்பு பொறுத்தல்
பாசாங்கு செய்வோரை பயன்கருதி சேர்(த்)தல்
நம்பிய உறவுகளின் நாடகம் வெளுத்தல்
வயது போனபின் வாழ்க்கை புரிதல்
வயோதிகத்தின் நிழலில் தனிமை சுடுதல்
இறுதிவரை எதிலும் தெளிவின்றி வாழ்தல்
இருப்பதில் விருப்பம் இறக்கையில் மிகுதல்  
இருந்ததன் சுமையுடன் கங்கையில் கரைதல்







1 comment: