Friday 27 April 2012

உயிர்

பருவமும் உருவமும் வயதின் வரைவு
இன்பமும் துன்பமும் மனதின் புனைவு
போனதும் வருவதும் நிகழ்வின் நினைவு
இருப்பதும் இறப்பதும் காலத்தின் கனவு 

உறவும் பிரிவும் உணர்வின் பிளவு
பொய்யும் மெய்யும் அறிவின் களவு
பற்றும் துறவும் அனுபவ விளைவு
இவற்றில் இருக்கு உயிர்களின் அழகு.







2 comments:

  1. அருமை.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. Wonderful. Your poem contents are very rich.

    ReplyDelete