Wednesday 18 April 2012

விருந்து

ஏதுமற்ற இலையில் நீரெடுத்து தெளிக்கையில்
ஒழுங்கற்று விழுந்திடும் துளிகளாய் காலம்
துளிகளை துடைத்தபின் துப்பரவாய் இருப்பதாக
நினைத்திடும் மனதுக்கு கிடைப்பதே ஞானம்.

வயதுகளின் இலையில் வைக்கப்படும் உணவை,
நிகழ்வுகளின் சுவையில் நிரம்பிடும் உணர்வை,
காலத்தின் விரல்கள் வழித்து உண்ட பிறகு
ஞாபகப்  பருக்கைகளே மீதமுள்ள மனது.

நினைவின் நாக்கு தீண்டும் இலையில்
இனிவரும் பொழுதுகள் இருக்குது உலையில்
காலம் நம்மை சமைக்கும் கலையில்
வாழ்வின் ருசி பசிக்கும் வரையில்.


  

2 comments: