Monday 9 January 2012

புகார்*

நதியில் குளித்தால் நம் கர்மம் கழியுமென்று
முழுதாய் முங்குதல் அவ்வளவு எளிதன்று;
ஆழம் பார்க்கும் நோக்கில்  வைத்தேன் கால்கள்
அழுக்கெடுக்கும் போக்கில்  கடித்தன மீன்கள்
உதறவும் மனமின்றி ஊன்றிடும் குணமின்றி
அரைகுறையாய் போடுகிறேன் நீரில் முழுக்கு
ஆங்காங்கே கரைகிறது ஆயுள் அழுக்கு
நதியில் முகத்துவாரத்தில் நகைக்கிறது காலம்
நம்பித் தொடர்கிறேன் நானும் அதை நாளும்...


*ஆறு கடலில் கலக்குமிடம்.

3 comments:

  1. நல்ல கவிதை.
    Followers Widget இணைத்துக் கொள்ளுங்கள்.
    இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. Please remove the Word Verification - this is not necessary.

    ReplyDelete
  3. Kumaran, your poems are simply superb

    ReplyDelete