Saturday 23 March 2013

வனப்பிரஸ்தம்...


அறிந்தவைகளில் ஆசை வைத்து
ஆசைகளில் நியாயப்படுத்தி
நியாயங்களை அர்த்தப்படுத்தி
அர்த்தங்களை மகிழ்ச்சியாக்கி
மகிழ்ச்சியை மையமாக்கி
மையத்தை மனதில் வைத்து
வையத்தில் வாழ்வதையே
உய்வதற்கான வழிகள் என்று
நெய்யப்படுகிறது நேர்த்தியின்றி
வாழ்வியல் விதிமுறைகள்;
விதிமுறை பற்றிய கேள்விகளை
மதிமுழுதும் வீசியபடி
முன்னறிவிப்பு ஏதுமின்றி
முன்செல்கிறது காலம்
முதுமையை முகர்ந்தபடி...

1 comment: