Saturday 3 November 2012

மழை பெய்த இரவு...


அன்பு என்ற ஒன்றை மட்டும்
அகிலம் முழுதும் அளிக்கும் மழை
அனைவரின் வீட்டிற்குள்ளும்
அவ்வப்பொழுது வர முயலும்;

விருந்தாளியை உபசரிக்க‌
விரும்பாத நம் குணத்தால்
கதவடைத்து வைத்தாலும்
கனிவுடன் காத்து நிற்கும்
அழகான குரலாலே
அனுமதி கேட்டு நிற்கும்;

மறுக்கின்ற பொழுதெல்லாம்
மனமுடைந்து மண்ணில் சாயும்
உறவாட வந்த மழை
இரவெல்லாம் அழுதபடி
சாலையில் தேங்கி நிற்கும்
காலையேனும் நம்மை பார்க்க...

2 comments:

  1. வரிகள் மிகவும் சிறப்பு... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மிக மிக அருமை
    எப்போதேனும் பெய்யும் மழையை விட
    என்றும் நமக்காக ஏங்கும் அன்பு மழையில்
    என்று நனைந்து களிக்கப் போகிறோம்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete