Wednesday 7 March 2012

காலம்

பொருந்தாத நிகழ்வுகளில் சிக்க வைக்கும்
வருத்தங்களில் மனதை விக்க வைக்கும்
விரும்பிய உணர்வுகளை விற்க வைக்கும்
திருத்தங்கள் செய்து கற்க வைக்கும்
விழுந்தாலும் மறுபடி நிற்க வைக்கும்
நமக்குள் நம்பிக்கை தக்க வைக்கும்


செய்பவை சரியென்று சொல்ல வைக்கும்
செய்தபின் அவற்றினுள் முள்ளை வைக்கும்
ரணங்கள் உண்டாக்கி  ஆற வைக்கும்
குணங்களில் குறுக்கிட்டு மாற வைக்கும்
உடனிருந்தே சமயங்களில் கவிழ வைக்கும்
முதிர்ச்சியின் மொட்டுக்கள் அவிழ வைக்கும்


இல்லாதவற்றின் பின் ஓட வைக்கும்
இருப்பின் பொருளை தேட வைக்கும்
இவற்றின் நடுவே வாழ வைக்கும்
இறுதியில் நம்மை மாள வைக்கும்
காலம் மீதொரு காதல் எனக்கு
கசப்பும் இனிப்பும் நாவில் இருக்கு.


  

2 comments: