Thursday 9 February 2012

பிறப்பு

ஊசிமுனையிலும் சிறுத்த உயிரணுவில்
வீசி எறியப்பட்ட வினையின் விதையுள்  
நாசியில்  காற்று பெற்று உலவும் நாமும்
நேசிக்க நேர்கின்ற உறவை உணர்வை
பூசித்து சேகரிக்கும் பொருளை பணத்தை
வாசித்துப்   பார்க்கின்ற நேரம் வந்தால் - அது
யோசிக்கத் தூண்டும் ஞானம் தந்தால்
காசிக்குப்  போய்வரத்  தேவை இல்லை
காலநதி மட்டுமே இங்கே கங்கை.



1 comment: