Friday 16 September 2011

தங்க நாற்கர நெடுஞ்சாலை...

ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கும் முதியோர்
ஆங்காங்கே நின்று கையசைக்கும் சிறியோர்
சட்டென்று தோன்றி மறையும் கிராமத்து வீடுகள்
சாலையோர நிழலில் அசை போடும் மாடுகள்
சக்கரங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நெற்போர்
சைக்கிளுடன் நின்று இளநீர் விற்போர்
இவைகள் ஏதுமின்றி இருபுறம் வேலியிட்டு
மூச்சு முட்டும் வேகத்தில் முன்னேறும் வாகனத்தில்
நன்றாய்த்தான் இருக்கிறது நாற்கர சாலை பயணம்
ஒன்றை இழந்த ஒருவித நெருடலுடன்...




No comments:

Post a Comment